மல்லிகைப்பூ கிலோ ரூ.3000 விற்பனை

தொடர் முகூர்த்த தினங்கள் காரணமாகவும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை ஒரு வாரமாக கடும் உச்சத்தில் நீடித்து வருகிறது.

நாளை முதல் அடுத்தடுத்த தொடர்ந்து மூன்று நாட்கள் முகூர்த்த தினங்களாக இருப்பது இந்த விலை உயர்வுக்கு மற்றுமொரு காரணம் என கூறும் வியாபாரிகள், வரும் நாட்களில் மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இன்று கடும் உச்சமாக மல்லிகை பூ கிலோ 3000 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்பனையாகும் சம்மங்கி  250 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனையாகும் பிச்சி, முல்லை பூக்கள் 1000 ரூபாய்க்கும்,  50 ரூபாய்க்கு விற்கப்படும் பட்டன் ரோஸ் 250 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்படும் அரளி 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Translate »
error: Content is protected !!