வேலை நிறுத்தப் போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள்: கோவை

கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்குத் தினக்கூலியாக ரூ.721 வழங்க அம்மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்திருந்தார்.

ஆனால் இது இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், பணி நிரந்தரம் உட்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.

இதனால் சுகாதார பணி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!