சசிதரூரைச் சந்தித்த திருமாவளவன்

காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் போட்டியிட உள்ளார்.

இவர் தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிப்பதற்காக நேற்று (6ம் தேதி) சென்னை வந்தார். பின் விமானம் மூலம் இன்று டில்லி திரும்புகிறார்.

இந்நிலையில் இவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!