ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் மீண்டும் கைது

மதுரை மாநகர் மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த  ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பகுதி செயலாளர் MS கிருஷ்ணன் என்பவரது வீட்டின்  கடந்த மாதம் 24ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை எஸ்எஸ்காலனி பகுதியை சேர்ந்த அபுதாஹிர் என்பவர் மாநில பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு பாதகமான செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

எனவே இவருடைய அத்தகைய பாதகமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தகவல் அளித்துள்ளார்.

அபுதாஹீர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Translate »
error: Content is protected !!