கனமழையால் கொத்தமல்லிக்கு வந்த மவுசு

தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் கொத்தமல்லி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வரத்து குறைந்துள்ளது.

இந்நிலையில் வரத்து குறைவால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் ரூ.10க்கு விற்கப்பட்டு வந்த கொத்தமல்லி கட்டு ரூ.50 ஆக உயர்ந்துள்ளது.

அன்றாட சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும் கொத்தமல்லி விலை உயர்ந்துள்ளதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!