பைக்கில் சென்றவர் மீது ஏறி இறங்கிய லாரி .. ஒருவர் பலி

சென்னை தாம்பரம் முடிச்சூர் சாலை லட்சுமிபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவர் மீது டிப்பர் லாரி ஏரி தலை நசுக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது
மருத்துவமனக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விசாரணையில்
சென்னை தியாகராயநகர் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சாமிவேல் (வயது-50 இவர் அப்போலோ மருந்தகத்தில் பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை சாமிவேல் மணிமங்கலத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று இன்று கலை தியாகராயநகருக்கு சென்று கொண்டிருக்கும் போது தாம்பரம் முடிச்சூர் சாலை லட்சுமிபுரம் சந்திப்பில் வந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த லாரி அவர் மேல் ஏரி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாலையில் உள்ள பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்ததாகவும் அதனால் பின்னால் வந்த லாரியின் பின்பக்க டயர் அவர் தலையில் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Translate »
error: Content is protected !!