ஜெய் பீம் படம் பார்த்ததில் கண்கள் குளமானது – நடிகர் கமல்ஹாசன் உருக்கம்

இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கிய ஜெய் பீம் படத்தை நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய ஒரு வழக்கினையே அடிப்படையாகக் கொண்டு ஜெய் பீம் படத்தினை எடுத்திருக்கிறார்கள். நேற்று வெளியான படத்தை படக்குழுவினருடன் பார்த்துவிட்டு நடிகர் கமல்ஹாசன், அவரது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ஜெய் பீம் படத்தை பார்த்தேன். என் கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா மற்றும் ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!