ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்- முதல்வர் ஆலோசனை

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் வரும் 23ம் தேதி காலை 11:30மணிக்கு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிக்க வேண்டி பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் வரும் 23ம் தேதி காலை 11:30மணிக்கு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெறும் ஆலோசனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள்,தமிழக அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.  பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், பண்டிகை காலங்களில் எடுக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படவுள்ளது.

Translate »
error: Content is protected !!