அதிமுக முன்னாள் அமைச்சர் கணவரின் நிபந்தனையை தளர்த்தி உத்தரவு

சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகராஜுக்கு விதிக்கபட்ட நிபந்தனையை தளர்த்தியது.

சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 76.50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவருக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாமக்கலில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தக்கோரி சரோஜா மற்றும் அவரது கணவர் வழக்கு தொடர்ந்தார்.

மூத்த குடிமக்கள் மற்றும் உடல் நலக்குறைவு உள்ளதால் சென்னையிலிருந்து நாமக்கல் சென்று வர இயலாத காரணத்தால் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!