அனைவரையும் ஒன்றிணைத்து வரும்  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்- சசிகலா

இபிஎஸ் ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து, 2024  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன், சசிகலா புகைப்படம் எடுத்துக் கொண்டார்.  இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக என்பது தொண்டர்களுக்கான இயக்கம் என்றும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் கட்சியை, எப்படி வழி நடத்தி சென்றார்களோ அதன்படியே கட்சியை வழிநடத்தி செல்லப் போவதாகவும் கூறினார். அப்போது அவரிடம், இபிஎஸ், ஒபிஎஸ் ஆகியோரை இணைத்து செயல்படுவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அனைவரையும் ஒன்றிணைத்து, 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் என்றும் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!