அகிலேஷ் யாதவுக்கு வாய்ப்பில்லை

உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம்  என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம்  3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் காங்கிரஸ், முதல்வர் வேட்பாளரை  அறிவிக்காமலேயே வேட்பாளர்கள் பட்டியலை  வெளியிட்டு வருகிறது.

இதனிடையே சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களான அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது உறவினர் சிவ்பால் யாதவ் ஆகியோர் போட்டியிடும் கார்ஹல் மற்றும் ஜஸ்வந்த் நகர் தொகுதிகளில்  வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!