கனவு இல்ல திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

கனவு இல்ல திட்டத்தின் கீழ் 6 எழுத்தாளர்களுக்கு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முன்னாள் மறைந்த முதலமைச்சர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி ஞானபீடம், சாகித்ய அகாதமி, மாநில இலக்கிய விருதுகள் போன்ற விருகளை பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி சாகித்திய அகாதமி விருது மற்றும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது பெற்ற ஜெகதீசன், கவிஞர் புவியரசன், முனைவர் சுத்தரமூர்த்தி,  பூ. மாணிக்கவாசகம் , முனைவர் மோகனராசு, அண்ணாமலை ஆகிய 6 எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டது. அப்போது செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

Translate »
error: Content is protected !!