விஜயகாந்தை சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்

 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைப் பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,

தமிழ்நாட்டு அரசியலில் தைரியமாக மக்களை திரட்டி அரசியல் செய்து வருகிறார் அதனடிப்படையில் அவரை சந்தித்ததாகவும், இது நட்பு ரீதியான ஒரு சந்திப்பு என்றும், அவர் மீது தனிப்பட்ட மரியாதை தனக்கு உள்ளது என்றார்.

மேலும் வருங்காலத்தில் அரசியலில் சூழ்நிலை மாறும், அதற்கேற்றார் போல் எங்கள் அரசியல் பயணமும் இருக்கும் என்ற அவர், தமிழ்நாட்டில் உள்ள கல்வி தரம் மேலும் உயர வேண்டும் என்றும்,  பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாத சூழ்நிலை இருக்கிறது என்று கூறினார். தற்போது கல்வியின் அடித்தளமே சரியாக இல்லை, நீட் தேர்வில் நம்பிக்கை இல்லாததால் தான் தற்கொலைகள் நடைபெற்று வருகிறது என்றும், போட்டி போடுகின்ற தன்மை மாணவர்களிடம் இல்லாத சூழல் உள்ளது என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி கல்வி வணிகமாக மாறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், தரமான கல்வியையும், நம்பிக்கையையும் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

 

Translate »
error: Content is protected !!