இன்னும் போலீஸ் பார்வையிலேயே பேசி வரும் அண்ணாமலை- வைகோ

தனது மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவது குறித்து  விளக்கம் அளித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,தொண்டர்கள் விருப்பம் எதுவோ அது ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில்  செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்னும் போலீஸ் பார்வையிலேயே பேசி வருவதாகவும், அரசியல் கொள்கை பற்றி அவருக்கு தெரியாது என்றும் கூறினார். குஜராத்தில் அதானி துறைமுகத்திலிருந்து  போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது குறித்து பாஜக தலைவர்கள் இதுவரை எந்த ஒரு பதிலும் கூறாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Translate »
error: Content is protected !!