வாகனங்களை அலங்கரித்து ஆயுத பூஜை கொண்டாட்டம்

சென்னையில் பொது மக்கள் தங்களது வாகனங்களுக்கு மாலை அணிவித்து, சந்தனம், குங்குமம் பூசி, பூசணிக்காய் உடைத்து உற்சாகமாக ஆயுதபூஜை கொண்டாடி வருகின்றனர்.

சென்னை பல்லவன் இல்லம் அருகேயுள்ள பாடிகாட் மூனிஸ்வரன் கோயிலில் பொது மக்கள் காலை முதல் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர  வாகனங்களை நிறுத்தி கொண்டு மகிழ்ச்சியுடன் ஆயுதபூஜை கொண்டாடி வருகின்றனர். ஆட்டோ, கார், இரு சக்கர உள்ளிட்ட வாகனத்திற்கு மாலை அணிவித்து, பூசணிக்காய் உடைத்து குங்குமம், சந்தனம் பூசி ஆயுத பூஜை கொண்டாடி வருகின்றனர். சாலையில் வாகனத்தை பயன்படுத்தும் போது விபத்துக்கள் நடக்காமல் நன்மை பயக்கும் என்ற அடிப்படையில் பூஜை செய்வதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

Translate »
error: Content is protected !!