முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன்

திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது, திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜெயக்குமார் தொடர்ந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்டவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் தரலாம் என்று தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்…

Translate »
error: Content is protected !!