நமது அம்மா ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகும் அழகு ராஜ்

நமது அம்மா என்ற அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக, மருது அழகுராஜ் அறிவித்துள்ளார். நாளிதழின் ஆசிரியராக பணியாற்றிய மருது அழகுராஜ், அதிமுகவின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், நதி காக்கும் இரு கரைகள் என்ற, தன்னை போன்றோரின் நம்பிக்கை, சுயநலத்தால் தகர்ந்து விட்டதால், அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பி.எஸ். நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!