டிடிவி தினகரன் எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து

 

அதிமுக முன்னாள் எம்.பி.குமார் குறித்து அவதூறாக பேசியதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்திலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு எம்பியாக இருந்த குமார் குறித்து அவதூறு பேசியதாக டிடிவி தினகரன், நடிகர் செந்தில் மீது திருச்சி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, இருவர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்

Translate »
error: Content is protected !!