அடுத்த 5 நாட்களுக்கு  தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 5 நாட்களுக்கு  தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்  நிலை கொண்டுள்ளது இது அடுத்த இரண்டு நாட்களுக்கு மேல் நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக இன்று முதல் வருகிற நவம்பர் 1ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கும், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!