சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க கோரிக்கை

 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட மேலும் இரண்டு வழக்கறிஞர்களையும் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக சுந்தர் மோகன் குமரேசன் பாபு ஆகியோர் இன்று பதவிப்பிரமாணம் பதவியேற்றுக்கொண்ட நிலையில்,  மேலும் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு வழக்கறிஞர்களையும்,உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 6 வழக்கறிஞர்கள் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதில் வழக்கறிஞர்கள் அப்துல் ஹமீது,ஜான் சத்தியன் ஆகிய 2 பேர் இன்னும் நீதிபதிகளாக நியமிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

 

Translate »
error: Content is protected !!