ஹஜ் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

புனித ஹஜ் பயணம் செய்வோருக்கான புறப்பாட்டு தலமாக சென்னையை மீண்டும் அறிவிக்க கோரிய தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி, ஹஜ் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் புறப்பாட்டு தலமாக இருந்த சென்னையை இந்திய ஹஜ் குழு பட்டியலில் இருந்து நீக்கியது. இதனால் மீண்டும் புறப்பாட்டு தலங்கள் பட்டியலில் சென்னையை சேர்க்க கோரி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சென்னை விமான நிலையத்தையும் புறப்பாட்டு தலமாக அறிவிக்க கோரி தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதை பரிசீலித்து வருவதாகவும் ஹஜ் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்து விரைந்து முடிவெடுக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

 

Translate »
error: Content is protected !!