முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோடு பயணம்

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கவும், சிறு குறு தொழில் துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பங்கேற்பதற்கும் கோவைக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் 23ஆம் தேதி செல்கிறார்.

23ஆம் தேதி கோவையில் இரவு தங்கும் தமிழக முதலமைச்சர் 24ம் தேதி காலை கோவையில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மாலையில் பொள்ளாச்சியில் நடைபெறும நிகழ்ச்சியில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் மாற்ற கட்சியினர் திமுகவில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.

25 ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு செல்லக்கூடிய தமிழக முதலமைச்சர் கொள்கிறார். சிறு குறு தொழில் நிறுவனங்களில் சார்பில் நடைபெறும் தொழிலுக்கு தோள் கொடுப்போம் திருப்பூர் மண்டல மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

அதைத்தொடர்ந்து 26 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு செல்லக்கூடிய தமிழக முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மற்றும் மாலை கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

Translate »
error: Content is protected !!