சின்னசேலம் தனியார் பள்ளி வழக்கு – சிபிசிஐடி விசாரணை

சின்னசேலம் தனியார் பள்ளி வளாகத்தில் உயிரிழந்த மாணவி எடை கொண்ட பொம்மையை மாடியிலிருந்து வீசி எரிந்து சிபிசிஐடி போலீசார் தடயங்களை பதிவு செய்தனர்.

சின்னசேலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து பள்ளி வளாகத்தில் இன்று பிற்பகல் சிவிசிஐடி எஸ் பி ஜியாவுல் ஹக் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து பொம்மை ஒன்று எடுத்து வரப்பட்டு அதை மாணவியின் எடை அளவிற்கு தயார் செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட மூன்றாவது தளத்தில் இருந்து பல்வேறு கோணங்களில் வீசி எரியப்பட்டது.

மேலும் மொட்டை மாடியில் இருந்து குதித்து இருந்தாலும் அல்லது வேறு நபர் தூக்கி வீசி இருந்தாலும் எந்த கோணத்தில் சடலம் கிடக்கும் என்ற செயல்முறை விளக்கத்தோடு விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் இதனை முற்றிலுமாக வீடியோ பதிவு செய்தனர்.

Translate »
error: Content is protected !!