மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று பிற்பகல் 12 மணி அளவில் அணைக்கான நீர்வரத்து 1,08,583 கன அடியாக அதிகரித்து நிலையில் தற்போது நான்கு மணி நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,13,513 கன அடியாக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.73 அடியாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பாசன தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு வந்த வினாடிக்கு 20,000 ஆயிரம் கன அடி தண்ணீரை 25,000 கன அடியாக அதிகரித்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

Translate »
error: Content is protected !!