கைவினை பொருட்கள் கண்காட்சி – திரளானோர் வருகை

 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. ஒடிசாவின் கைவினைக் கவுன்சில் சார்பில் நடைபெற்ற கண்காட்சியில் கல் சிற்பம் செதுக்குதல், பனை ஓலைகள் உள்ளிட்ட கைவினை பொருட்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும், விருது பெற்ற சிறந்த கைவினை கலைஞர்களின் படைப்புகளும் காட்சிப்படுத்தபட்டு இருந்தன.

இரண்டு நாட்கள் நடைபெற்ற கண்காட்சியில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு கைவினை பொருட்களை கண்டு ரசித்து, வாங்கி சென்றனர். கைவினை மேம்பாடு மற்றும் கைவினை கலைஞர்களின் நன்மைக்காக இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!