விதிகளை மீறி நகைக்கடன் பெற்றவர்களிடம் கடனை வசூல் செய்யுங்க.. தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடனை வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்டு நகைக்கடன் பெற்றிருக்கும் தகுதி பெற்றவர்கள் அந்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் பல மாவட்டங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விதிகளை மீறி 5 சவரனுக்கு அதிகமாக நகைக்கடன் பெற்றவர்களின் ஆதாரங்களை தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை கேட்டுள்ளது. எனவே விதிகளை மீறி நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து நகைக்கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!