கிராமசபை கூட்டத்தை ரத்து செய்து தமிழக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு முடிவு

மதுரையைச் சேர்ந்த லூயிஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,
“தமிழ்நாடு அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று கிராமசபைக் கூட்டம் நடத்துவதற்கான உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த உத்தரவு சட்ட விரோதம் இந்த அரசாணையை ரத்து செய்து, மீண்டும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் கூறியுள்ள கோரிக்கையின்படி கடந்த காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம பகுதிகளிலும் வழக்கம் போல கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது” என தெரிவிக்கப்பட்டது .

இதனை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

Translate »
error: Content is protected !!