ஜெயந்த் சவுத்ரியின் சர்ச்சை கருத்துக்கு தர்மேந்திர பிரதான் பதிலடி

 

 

ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி தலைவர் ஜெயந்த் சவுத்ரியின் சர்ச்சை கருத்துக்கு பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்துள்ளார்.

உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் ராஷ்ட்ரிய லோக் தளம் கூட்டணி வைக்க போவதாக வெளியான வதந்தி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி தலைவர் ஜெயந்த் சவுத்ரி, யார் வேண்டுமானாலும் சுண்டுவதற்கு நான் ஒன்றும் 25 பைசா நாணயம் அல்ல என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அரசியல் அரங்கில் ஜெயந்த் சவுத்ரி ஒரு குழந்தை எனவும் அவரது தந்தை அஜித் சிங் பல கட்சிகளுக்கு தாவியவர் என்றும் சரித்திர பாடத்தில் ஜெயந்த் சவுத்ரி சற்று பலவீனமானவர் போல என்றும் விமர்சித்துள்ளார். மேலும் முதல்முறை வெற்றி பெற்ற போது ராஷ்ட்ரிய லோக் தளம் யாருடைய கூட்டணியில் இருந்தது என கேள்வி எழுப்பிய அவர், குழந்தையின் பேச்சை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கேலியாக கூறினார்.

 

Translate »
error: Content is protected !!