என்சிசி அமைத்த உயர்நிலைக் குழுவில் ’தல தோனி’

தேசிய மாணவர் படை என அழைக்கப்படும் என்சிசியில் நிகழ்கால சூழலுக்கு ஏற்ப மாற்றத்தைக் கொண்டு வர உயர்நிலைக் குழுவை பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

முன்னாள் எம்பி பைஜெயந்த் பண்டா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, எம்பி வினய் சஹஸ்ர உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மகேந்திர சிங் தோனி ஏற்கனவே இந்திய ராணுவத்தின் கெளரவ லெப்டினட் கர்னலாக உள்ளதுடன் பாரசூட் படைப்பிரிவு பயிற்சியையும் எடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது என்சிசியை புதுப்பிக்க அமைக்கபட்ட உயர்நிலைக் குழுவிலும் அவர் இடம்பிடித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!