பேரூராட்சி தலைவர் பதவி தேர்தலை திமுக புறக்கணிப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை திமுக புறக்கணித்ததன் காரணமாக தேர்தல் 2-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது.

குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 8 உறுப்பினர்களில் திமுக 4, அதிமுக 4 உறுப்பினர்கள் என சமபலத்துடன் உள்ளது. கடந்த 4-ம் தேதி நடந்த தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை திமுகவினர் புறக்கணித்ததால் அப்போது தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து இன்று நடைபெற்ற குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில், தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளும், அதிமுக உறுப்பினர்கள் 4 பேரும் காத்திருந்தனர். ஆனால் திமுக உறுப்பினர்கள் இன்றும் தேர்தலை புறக்கணித்ததால் 2-வது முறையாக தேர்தலை ஒத்தி வைக்கப்பட்டது.

 

Translate »
error: Content is protected !!