திமுக கட்சியே ஒரு தூரோக கும்பல்-மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

திமுக கட்சியே ஒரு தூரோக கும்பல் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறில்  உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவசிலைக்கு  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைத்து, பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக அறிவித்து அவருடைய புகழுக்கு புகழ் சேர்த்தது அம்மாவின் அரசு என்றார். மேலும் பேருந்து நிலையங்களில் அரசு விளம்பரப் படங்களை வைப்பது தான், அரசு செய்த சாதனை என்று சாடிய அவர், திமுக தலைவர் கருணாநிதியை முதலமைச்சராக அடையாளம் காட்டியது புரட்சி தலைவர் தான், புரட்சி தலைவர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காது என்பதால் அக்கட்சி ஒரு துரோக கும்பல் கொண்டது என கடுமையாக விமர்சித்தார்.

Translate »
error: Content is protected !!