திமுக உட்கட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டும் – திமுகவினர் போராட்டம்

 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றியத்தில் நடைபெற்ற திமுக உட்கட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டும் என திமுகவினர் அண்ணா அறிவாலயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கோட்டை ஒன்றியத்திற்கு நடந்துமுடிந்த ஒன்றிய செயலாளர் தேர்தலில் பரமசிவம் என்பவர் அதிக வாக்கு பெற்றுள்ளதாகவும், ஆனால் அதனை மாற்றி தற்போது ஒன்றியச் செயலாளராக உள்ள ரவிச்சந்திரன் என்பவரை அறிவிக்க உள்ளதாக புகார் தெரிவித்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் அண்ணா அறிவாலயத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.செங்கோட்டை ஒன்றியத்திற்க்கு மட்டும் அறிவிக்காமல் இழுத்தடிப்பது தேர்தல் முடிவை மாற்ற என்று கூறி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் மு .க ஸ்டாலின் அறிவாலயத்தில் இருந்தபொழுது நடந்த இந்த போராட்டத்தால் பரபரப்பு காணப்பட்டது. பின்னர் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் இதனையடுத்து தர்ணா போராட்டத்தை  கைவிட்டனர்.

 

 

Translate »
error: Content is protected !!