சட்டப்பேரவையில் புகழ்ந்து பேச பயன்படுத்த வேண்டாம்

 

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை புகழ்ந்து பேச பயன்படுத்த வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் வினாக்கள் விடைகள் நேரத்தின் போது பேசிய ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா முதலமைச்சரை புகழ்ந்து பேசினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய தமிழக முதலமைச்சர், தான் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும், ஆளும் கட்சியாக தற்போது இருக்கும் போதும், தொடர்ந்து வலியுறுத்துவது உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை, கேள்விக்காக மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்றும் புகழ்ந்து பேச பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

மேலும், குறிப்பாக ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இதனை கட்டாயம் பின்பற்ற மீண்டும் வலியுறுத்துவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!