எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது

 

எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்று கூறியதற்கு முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அவரின் ஒரே வாரிசு தகுதியுடன் தான் அவரது மனைவி ஜானகி அன்று முதல் அமைச்சராக ஆனது வாரிசு அரசியல் இல்லையா?  என்ற கேள்வி எழுப்பியுள்ளது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் அது வாரிசு அரசியல் இல்லையா?  ஒருவேளை பன்னீர்செல்வத்திற்கு எதிராக தான் அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்லத் தொடங்கியிருக்கிறாரா?  பொறுத்திருந்து பார்ப்போம் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!