முறைகேடு வழக்கிலிருந்து எடப்பாடி பழனிசாமியால் தப்ப முடியாது

டெண்டர் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்த வழக்கில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் தப்ப முடியாது என முரசொலி நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில், டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் வழக்கு பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியால் தப்பா முடியாது என முரசொலி நாளிதழில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தனது உறவினர்களுக்கே பெரும்பாலான ஒப்பந்தங்களை வழங்கியதாகவும், இது தொடர்பாக நடத்தப்படும் விசாரணை நேர்மையாகவும், நியாயமாகும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

Translate »
error: Content is protected !!