தேர்தல்: போஸ்டர் அகற்றும் பணி தீவிரம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நடத்தை விதகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து கட்சி சுவர் விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்களை அகற்றி வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் சாலை ஓரங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அண்ணாசாலை, வேப்பேரி, புரசைவாக்கம், தி.நகர், வடபழனி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதேபோல் தலைவர்களின் சிலைகளை மூடி வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சாலை ஓரமாக உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை சாக்கு மூட்டை அல்லது துணியால் மூடி மறைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

Translate »
error: Content is protected !!