சட்ட விரோதமான மின் வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு – விவசாயி கைது

கோவை வரப்பாளையம் பகுதியில் மனோகரன் என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்ட சட்ட விரோதமான மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த விவகாரத்தில்,  தலைமறைவாக இருந்த விவசாயி மனோகரனை கோவை வனத்துறையினர் கைது செய்தனர்.

கடந்த பிப்ரவரி 12ம் தேதி துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்ட விரோதமான மின் வேலியில் சிக்கி 15 வயது ஆண் யானை உயிரிழந்ததையடுத்து, வனத் துறையினர் விவசாயி மனோகரனை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, விவசாயி மனோகரன் தலைமறைவானார். இந்நிலையில் தற்போது பன்னிமடையில் தலைமறைவாக இருந்த மனோகரனை கோவை வனச்சரகர் அருண்குமார் தலைமையிலான வனத்துறையினர் இன்று அதிகாலையில் கைது செய்து, விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்றனர்.

 

Translate »
error: Content is protected !!