சிறப்பு முகாம் அகதிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்திற்குள் அகதிகளுக்கான சிறப்பு முகாம் அமைந்துள்ளது. இங்கு இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சியில் உள்ள இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளிடம் நேற்று தேசிய புலனாய்வு முகமை (NIA)அதிகாரிகள் 13 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில் பொருளாதார குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் இன்று காலை 11 மணி முதல் விசாரணையில் சிறப்பு முகாமில் அகதிகளிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!