ஆங்கிலம் அறிவோம் புத்தகம் வழங்கும் விழா – எம்.எல்.ஏ உதயநிதி பங்கேற்பு

லேடி வில்லிங்டன் அரசு மேல்நிலைப்பள்ளியில் – அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தனர்.

சென்னை திருவில்லிக்கேணி லேடி வில்லிங்டன் மேல்நிலைப்பள்ளியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் அறிவோம் புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் அறிவோம் புத்தகங்களை வழங்கினர். மேலும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதல்களும் வழங்கப்பட்டது.

மேலும் பள்ளியில் தனியார் நிறுவன பங்களிப்புடன் 350 குப்பை தொட்டிகள், வெண்புள்ளி குறித்த விழிப்புணர்வு இயக்கம், கணினி ஆய்வகமும் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினால் திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் உற்சாகமாக அன்பில் மகேஷ் மற்றும் உதயநிதியை வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!