2022 ஆண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு பட்டியலில் இந்தியா கடைசி இடம் பெற்றுள்ள நிலையில், மத்திய அரசு அதனை நிராகரித்துள்ளது. 180 நாடுகள் அடங்கிய சுற்றுச்சூழல் செயல் திறன் குறியீடு பட்டியலை தயாரித்துள்ள அமெரிக்காவின் யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்கள், இதில் இந்தியாவுக்கு கடைசி இடம் வழங்கியுள்ளன.
இதற்கு பல்வேறு காரணங்களும் கூறப்பட்டுள்ளன. இந்தநிலையில் இந்த பட்டியலில் பல அம்சங்கள் அறிவியல் பூர்வமற்ற வழிகளில், அதாவது ஊகங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் எந்தெந்த அம்சங்களில் இந்தியா சிறப்பாக செயல்பட்டதோ அது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.