OPS தனது நிலை பாட்டை மாற்றி வருவதாக EPS குற்றச்சாட்டு

ஓ.பி.எஸ். அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாக ஈ.பி.எஸ். குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் நேற்று முன்தினம் நடைபெற்ற கழக நிர்வாகிகள் கூட்டம் இரண்டும் செல்லாது எனக்கூறி, இந்திய தேர்தல் ஆணையத்தில், ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் தனக்கு ஆதரவாகவும், ஒற்றை தலைமை வேண்டும் என்றே கூறுவதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Translate »
error: Content is protected !!