முன்னாள் அமைச்சர் அலுவலகத்திற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் வந்ததால் பரபரப்பு

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறும் இடத்திற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் அமைச்சர் காமராஜ் நிறுவனத்திற்கும் அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை நிறுவனத்திற்கும்
ஒரே ஆடிட்டர் என்பது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை வருமான வரி சோதனை மூன்றாவது நாளாக சென்னையில் நடைபெறுகிறது. இதன் தொடர்புடைய ஆடிட்டர் மயிலாப்பூரில் செயல்படும் ஜி பி ஏ கன்சல்டன்சியிலும் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்றது.

இன்று முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகளும் மயிலாப்பூர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வருமானவரித்துறை அதிகாரிகள் மயிலாப்பூர் ஜி பி ஏ கன்சல்டன்சி அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் காவல்துறை உள்ளே அனுமதிக்கவில்லை. வருமானவரித்துறை அதிகாரி ஒருவரை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தனர். சிறிது நேரத்தில் அந்த அதிகாரியும் புறப்பட்டு சென்றார்.

Translate »
error: Content is protected !!