10க்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் இடங்களில் முக கவசம் கட்டாயம்

மகளிர் சிறப்பு சிறுநீரயியல் மாநாடு மற்றும் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழைகளையும் வழங்கிய பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது என எச்சரிக்கை வழங்கப்பட்டு உள்ளது, இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது, தமிழகத்தில் 2 ஆயிரத்திற்கும் மேலாக உள்ளது.

முதல்வருடன் நடைபெற்ற கூட்டத்தில் கொரோனா பரவும் வேகமாக தன்மை உள்ளதால், இதிலிருந்து தற்காத்து கொள்ள அரசு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளதாக கூறினார். மேலும், 10க்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் அனைத்து இடங்களிலும் முககவசம் கட்டாயம் என்றார். மேலும், தடுப்பூசி போடப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகி இருக்கும், எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும், மூன்றாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய நபர்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் 95% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 85% பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். மேலும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையிலும், 18-59 வயதுடையவர்கள் தனியார் மருத்துவமனையிலும் செலுத்தப்பட்டு வருகிறது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பவர்கள் உடனடியாக சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும், வரும் 31 வது மெகா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் 10 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.

கொரோனா பரவல் அதிகரிக்கும் பொழுது அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறோம், தமிழகத்தை பொருத்தவரை 95 % நபர்கள் வீட்டில் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர், 5% மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். மேலும், 30 ஆயிரத்திற்கும் மேல் நாள் ஒன்றுக்கு ஆர்.டி. பி.சி.ஆர் பரிசோதனை எடுத்து வருகிறோம் என்றார்.

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் கிணற்றில் மருத்துவக் கழிவு இருப்பதாக செய்தி வெளியானது தொடர்பாக குழு அமைக்கப்பட்டிருக்கிறது அறிக்கை வந்தவுடன் அது குறித்து தெரிவிக்கப்படும்.

கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் அதிமுக பொதுக்குழுவில் 2000 த்தும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ள நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு கட்சி தலைமை கூட்டத்தை பாதுகாப்பாக நடத்த வேண்டிய பொறுப்பு உள்ளதாகவும், கட்சி தலைமை தங்கள் நிர்வாகிகளை பாதுகாக்க முறையான முக கவசம் அணிய சொல்லி அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது என தெரிவித்தார்

முன்னதாக மேடையில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்

கஸ்தூரிபாய் மருத்துவமனையில்
30 வருடங்களுக்கு முன்பு சிறுநீரயியல் துறை தொடங்கி அதன் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து கூட வந்து பயிற்சி பெற்று வருவதாக, டெல்லி AIMS போன்ற மருத்துவமனையில் மட்டும் இருக்கும் இந்த சிகிச்சை முறை தமிழகத்திற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்து இருக்கிறது என்பது பெருமையாக உள்ளது என்றார். இன்று நடைபெறும் இந்த மாநாட்டில் 27 நாடுகளிலும்,
15 மாநிலங்களில் இருந்தும் மருத்துவர்கள் 300 பேர் நேரடியாகவும், 700 பேர் காணொளி காட்சி மூலமாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளதாக கூறினார்.

23 காசநோய் சிகிச்சை பெறும் நடமாடும் வாகனங்களை முதல்வர் துவக்கி வைத்தார். காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டும் இல்லமால் அவர்களுக்கு ஊட்டச்சத்து பொருகளை 110 தன்னார்வலர்கள் வழங்கி வருகிறார்கள் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறினார்.

மேலும், தமிழகத்தில் சிறுநீரகத் துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 63 % பெண்களுக்கு சிறுநீரக பிரச்சினை ஏற்படுகிறது. அதிலும், குறிப்பாக
35 வயதிற்கு மேற்பட்ட 50% பெண்களுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்படுகிறது என தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!