விவசாயி தற்கொலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ரூ.5 லட்சம் இழப்பீட்டு

தர்மபுரி மாவட்டம் கரியப்பனஅள்ளி கிராமத்தில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்காக நிலத்தில் அளவீடு செய்யும் பணி நடந்து வரும் நிலையில்,  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி விவசாயிகள் ஆர்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி கணேசன் என்பவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின்  உடலை அங்கிருந்தவர்கள் மீட்டு பாலவாடியில் வைத்து போராட்டம் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே கணேசன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தும், மேலும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகையும் அறிவித்துள்ளார்.

மேலும், கருணாநிதி வழியில் செயல்பட்டு வரும் தி.மு.க. அரசு என்றென்றும் விவசாயிகளுக்கு உற்றதோழனாக இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!