பெண் எஸ்பி பாலியல் தொல்லை தொடர்பான ஆவணங்கள் திருட்டு

கடந்த 2021ல் பெண் எஸ்பிக்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஓர் ஆண்டாக வழக்கு விசாரணை நடைப்பெற்று வருகிறது.

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், பெண் எஸ்பிக்கு இடையே நடந்த உரையாடல் பதிவு, வாட்ஸ் அப் மெசேஜ் பதிவு, கால் அழைப்பு பதிவு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரால் வழங்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சியடைந்துள்ளார்.

காணாமல் போன ஆவணங்களின் மறு நகல் ஆவணங்களை வரும் 25ம் தேதிக்குள் மீண்டும் சமர்ப்பிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.

வழக்கு ஆவணங்கள் காணாமல் போயிருப்பது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!