அரசியல் கட்சி, மதத்துக்கும் ஆதரவாக ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைக்க கூடாது

திருச்சி, மணப்பாறை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு இரவு நேரத்தில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சக்திகுமார் சுகுமார குருப், “ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரிகமான உரையாடல்களோ இருக்கக்கூடாது. அரசியல் கட்சி அல்லது மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்க கூடாது.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ மதுபானத்தையோ உட்கொள்ளக் கூடாது.

பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது.

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்.

எந்த அரசியல் கட்சி அல்லது மதத்துக்கும் ஆதரவாக எதிராகவோ ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைக்க கூடாது.
சாதி அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது, இரட்டை அர்த்த பாடல்கள் இடம்பெறக்கூடாது.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ , மதுபானத்தையோ உட்கொள்ளக் கூடாது.

பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்றும், நிகழ்ச்சிகள் இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என கடுமையான நிபந்தனைகளை விதித்து அனுமது வழங்கி உத்தரவிட்டார்.

Translate »
error: Content is protected !!