வெள்ள ஆபயா எச்சரிக்கை – காவிரி கரையோர பகுதி

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணா தாலுகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 62635 கனஅடியாக உள்ளது நீர் வெளியேற்றம் 62043 கனஅடியாக உள்ளது. அதேபோல் மைசூரு மாவட்டம் H.d.கோட்டை யில் உள்ள கபிணி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் 28 ஆயிரம் கனஅடியாக உள்ளது.

தற்போது இரண்டு அணைகளிலிருந்து சேர்த்து சுமார் 90 ஆயிரத்து 43 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் கூடுதலாக கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 75 ஆயிரம் முதல் 1.5 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள ஆபய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!