கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு – குளிக்க தடை

கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை 9-வது நாளாக தொடர்கிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டகணல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால், கும்பக்கரை அருவிக்கான நீர்வரத்து அதிகரித்தது. மேலும், கடந்த 28-ஆம் தேதிமுதல் அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டி வரும் கனமழை காரணமாகவும் கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

ஒரு வாரத்திற்கும் மேலாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவிக்கு செல்லவும், அருவியில் குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 9-வது நாளாக இன்றும் நீடிக்கிறது.

Translate »
error: Content is protected !!