முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மலர்கண்காட்சி

 

சென்னை கலைவாணர் அரங்கில் நாளை தொடங்க உள்ள மலர் கண்காட்சிக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் முதல்முறையாக நாளை முதல் மலர்கண்காட்சி தொடங்குகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிரம்மாண்டமாக அமைய உள்ள மலர் கண்காட்சி பணிகளை தோட்டக்கலை துறை சார்பில் படு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை முதல் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ள மலர் கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மலர் கண்காட்சியை பொதுமக்கள் காண கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி  நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில் குதிரை, சிங்கம், கரடி, போன்ற சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

 

Translate »
error: Content is protected !!