விபத்து, உடல் நலக்குறைவால் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு நிதி வழங்கல்

விபத்து மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதியை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்.

சென்னை காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்தில் மரணமடைந்தால் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில்  வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்துகொண்டு பணியில் இருந்தபோது இருந்த இரண்டாம் நிலை காவலர் முதல் உதவி ஆய்வாளர் வரையிலான 32 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கு நேரில் வரவழைத்து தலா 3 லட்சத்துக்காண காசோலையை வழங்கினார்.

Translate »
error: Content is protected !!